கடலாடி முத்தாலம்மன் கோயிலில் விளக்கு பூஜை விளக்கு பூஜை
கடலாடி, : கடலாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. செப்.23ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர் முத்தாலம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை நன்குடி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.