நடுரோட்டில் சாய்ந்த மரம்
திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காற்றில் வேப்ப மரம் ரோட்டில் சாய்ந்தது. திருவாடானை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் சென்று மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.