உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம் 

 எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., அலுவலகம் அருகே அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழி லாளர் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கிளை தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர்கள் சட்டம் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். கிளை செயலாளர் வெயில் முத்து உள்ளிட்ட ஊழியர்கள் பலர் பங் கேற்றனர். கிளை பொறுப்பாளர் சுல்தான் பாட்ஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்