/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் அறிவிப்பு பலகை சேதம்: காத்திருந்து பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் அறிவிப்பு பலகை சேதம்: காத்திருந்து பயணிகள் பாதிப்பு
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ் நேர அட்டவணை விபரப் பலகை சேதமடைந்துள்ளதால் எந்தநேரத்தில் பஸ் வரும் எனத்தெரியாமல் பயணிகள் காத்திருந்து சிரமப் படுகின்றனர். கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த பஸ்கள் வந்து, புறப்படும் நேரத்தை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது சேதமடைந்து ஊர் பெயர்களின் எழுத்துகளும் தெரியவில்லை. இதனால் பஸ்வரும் நேரம் குறித்து தெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் புதிதாக அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.