சாலை ஓரத்தில் கவிழ்ந்த லாரி
தொண்டி: சேலத்திலிருந்து கிணற்றுக்கு தேவைப்படும் சிமென்ட் உறைகளை ஏற்றிக்கு கொண்டு தொண்டியை நோக்கி லாரி சென்றது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமானேந்தல் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. லாரியை மீட்கும் பணி நடந்தது. தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.