உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் கொள்முதல் நிலையம் இன்று முதல் செயல்படும்

நெல் கொள்முதல் நிலையம் இன்று முதல் செயல்படும்

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய 4 இடங்களில் இன்று முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது. இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக இந்த நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது. சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2450க்கும், பொது ரகம் ரூ. 2405க்கும் கொள்முதல் செய்யபடும். ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து நெல் வரத்து அதிகமாகும் பட்சத்தில் கூடுதலான இடங்களில் திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !