ரோட்டில் உலாவரும் கால்நடைகள் மக்கள் அச்சம் : விபத்து அபாயம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள், ஆடுகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார் பேரூராட்சி காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஏதாவது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் கால்நடைகளை ரோட்டில் விடுபவர்கள் மீது பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் துரத்தியதில் முதியவர் காயம்
கீழக்கரை: வடக்குத்தெரு பகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு ரோட்டில் நடந்து சென்ற சீனி 54, என்பவரை அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த வெறிநாய்கள் துரத்தியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.