உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 4 லட்சத்து 165 கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

4 லட்சத்து 165 கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 165 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1000 ரொக்கம்வழங்கப்பட உள்ளது.ராமநாதபுரம் வசந்தநகரில் உள்ள ரேஷன் கடையில்பொங்கல் தொகுப்பு, ரொக்கம் ரூ.1000 வழங்கும் திட்டத்தைகலெக்டர் விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்தார். பரமக்குடிஎம்.எல்.ஏ., முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர்கோவிந்தராஜலு முன்னிலை வகித்தனர். கலெக்டர் கூறியதாவது: பொது விநியோகத்திட்டத்தில் மாவட்டத்தில் 783 ரேஷன் கடைகளில் 4லட்சத்து 165 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புபொருள்களாக ரூ.1000 மற்றும் வேட்டி, சேலை, 1 கிலோசர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு வழங்கப்படுகிறது என்றார்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் மனோகரன், துணைப்பதிவாளர் கோவிந்தராஜன், ஆர்.டி.ஓ.,கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன்,ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ