மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி,நேற்று காலை கோயில் நவதி மண்டபத்திற்கு பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளினார். அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருவிழா குருக்கள் ஸ்ரீராம், கோயில் சர்வசாதகம் கணபதிராமன் அம்பாள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். பின், பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பேஷ்கார் ராதா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நாட்களான ஜூலை 30 ல் ஆடிஅமாவாசை தீர்த்தவாரி உற்சவம், வெள்ளிரதம், ஆக.,1ல் அம்பாள் தேரோட்டம், ஆக.,3 ல் அம்பாள் தபசு, பூப்பல்லக்கு, ஆக.,4ல் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம், ஆக.,9ல் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாளில் தினமும் இரவில் கோயில் வடக்கு நந்தவன கலையரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெறும்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago