மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
31 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
31 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
32 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
33 minutes ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரியவகை பட்டியலில் உள்ள பறவைகளை வேட்டையாடிய ராஜேந்திரன் 50, மகன் பழனிச்செல்வத்தை 26, வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மாவட்ட வன அலுவலர் ேஹமலதா தகவலின் பேரில் சாயல்குடி வனச்சரகர் ராஜசேகரன் தலைமையில் வனத்துறையினர் கமுதி அருகே பேரையூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டூவீலர்களில் பறவைகளுடன் 2 பேர் சிக்கினர். விசாரணையில் பரமக்குடி லீலாவதி நகர் ராஜேந்திரன், மகன் பழனிச்செல்வம் என தெரிந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து அரியவகை பறவைகளான உள்ளான்-4, வெண் கொக்கு -1, தாரா வாத்துக்கள் - 17 ஆகியவற்றை உயிருடன் பறிமுதல் செய்து சாயல்குடி இருவேலி கண்மாயில் பறக்க விட்டனர். இருவரின் 2 டூவீலர்களை பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுபோல் ராமநாதபுரத்தில் வனச்சரகர் நித்தியகல்யாணி தலைமையில் தங்கப்பாநகரில் வனத்துறையினர் சோதனை செய்த போது இளையராஜா 32, என்பவர் கானாங்கோழி, கொக்கு ஆகிய பறவைகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இறந்த நிலையில் இருந்த பறவைகளை பறிமுதல் செய்து ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
31 minutes ago
31 minutes ago
32 minutes ago
33 minutes ago