உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர்நிலைகளில் ஒத்திகை பயிற்சி

நீர்நிலைகளில் ஒத்திகை பயிற்சி

முதுகுளத்துார்: நெடுங்குளம் கிரா மத்தில் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடந்தது. சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமை வகித்தார். அப்போது நெடுங்குளம் கிராமத்தில் உள்ள ஊருணியில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் காப்பாற்றுவது, தண்ணீரில் சிக்குபவர்களை காப்பாற்றி முதலுதவி அளிப்பது குறித்து செய்து காட்டினார். கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ