மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
01-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பயனடையும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.11 கோடியில் செயற்கை ஓடு தளம் (சிந்தெடிக்), கால்பந்து மைதானத்துடன் அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட தடகள வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓடுதளம் மண் தரையாக உள்ளதால் இங்கு பயிற்சி பெற வீரர்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மைதானத்தில் செயற்கை ஓடுதளம் (சிந்தெடிக்) வசதியின்றி தடகளப்போட்டியில் சாதிக்கும் வீரர்கள், வீரங்கனைகள் மாநில, தேசிய போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக வெளியூர்களுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.எனவே செயற்கை இழை ஓடுதளம் அமைக்க வேண்டும் என வீரர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சட்டசபை விளையாட்டுதுறை மானியக்கோரிக்கையில் ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு மைதானம், செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.11 கோடியில் செயற்கை ஓடும்தளம், கால்பந்து மைதானம் அமைக்கும் பணிகள் நடப்பு ஆண்டில் துவங்க உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறினர்.
01-Apr-2025