மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வு
உத்தரகோசமங்கை: நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.இதில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் 18 பேர் குழுவாக ஹாக்கி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இவர்கள் பிப்.,6 முதல் 11 வரை தேனி மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற ஹாக்கி அணி வீராங்கனைகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராணி, ஆசிரியைகள் ரேணுகா, மணிமேகலை, ராமானுஜம், நந்தினி, பத்மாவதி, ஜமுனா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.