ஆசிரியர் தற்கொலை
ராமநாதபுரம், : திருவரங்கம் கொழுந்துறை நாகராஜன் 39. கார்த்திகா 32, என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். நாகராஜன் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். மனைவி தனியார் பள்ளி ஆசிரியர்.இவர்கள் வேலை நிமித்தமாக பேராவூர் பழங்குளம் பகுதியில் வசித்தனர். நாகராஜன் டெங்கு, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நிலை பாதிப்பால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.