உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை முடக்கம்

தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை முடக்கம்

திருவாடானை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் சேவை முடக்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் உள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இந்த இ-சேவை மையத்தில் தினமும் நிறைய பேர் சென்று பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி மாற்றங்கள் மற்றும் பல்வேறு திருத்தம் தொடர்பாக வந்து செல்கின்றனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு நாட்களாக இந்த இ-சேவை மையம் முடங்கியுள்ளது. இதனால் திருவாடானையிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள எஸ்.பி.பட்டினம், தொண்டி, மங்களக்குடி, முள்ளிமுனை, காரங்காடு பகுதியிலிருந்து வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வருவாய் அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவில் மட்டுமே ஆதார் சேவை இயங்கி வருகிறது. மற்ற தாலுகாக்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீரானவுடன் ஆதார் சேவை தொடரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை