மேலும் செய்திகள்
கிளாரில் திருவாசகம் முற்றோதல்
19-Nov-2024
திருவாடானை : பவுர்ணமியை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. அதிலுள்ள 658 பாடல்களை திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த சிவனடியார்கள், முருகேசன், கவிதா, திருச்சி தாயுமானவர் சுவாமி சிவனடியார்கள், காலை முதல் மாலை வரை பாடினர். மாலையில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
19-Nov-2024