உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை, : திருவாடானை அருகே பாண்டுகுடியில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசியை முன்னிட்டு இக் கோயிலில் தினமும் பூஜைகள் நடக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமிநாராயணபெருமாள் திருமண அலங்காரத்தில் மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தனர். பாண்டுகுடி ஸ்ரீஹரிராம பக்த பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் அதைத்தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை