உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேலையில்லா இளைஞர்கள்உதவித்தொகை பெறலாம்

வேலையில்லா இளைஞர்கள்உதவித்தொகை பெறலாம்

ராமநாதபுரம் : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த பணி வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வி பெற்றவர்கள் மாதம் ரூ.200ம், 10வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவித் தொகை கல்வித்தகுதிக்கு ஏற்ப ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்தில்பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அனைத்து சான்றுகளுடன்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்