உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கர் ரோப்கார் சேவை இரண்டு நாட்கள் நிறுத்தம்

சோளிங்கர் ரோப்கார் சேவை இரண்டு நாட்கள் நிறுத்தம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது.மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, கடந்த மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இந்த ரோப்கார் வாயிலாக பயணித்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை