உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

சேலம்: வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பால், பணிகள் பாதிக்கப்பட்டன.மத்திய அரசு, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதை கண்டித்து நேற்று சேலத்தில் வக்கீல்கள் சங்கத்தினர், நீதிமன்றங்களுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ