பட்டா கேட்டு பா.ஜ., ஆர்ப்பாட்டம்
வாழப்பாடி: பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்டம், பட்டியல் அணி சார்பில் வாழப்பாடி, மேட்டுப்பட்டி பவர் ஆபீஸ் அருகே நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். அதில், எம்.பெருமாபாளையத்தை சேர்ந்த பட்டியல் அணி பிரிவினருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோஷம் எழுப்பினர். வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து சண்முகநாதன் கூறுகையில், ''எம்.பெருமாபாளை-யத்தில், 53 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம், இரு ஆண்டாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்,'' என்றார்.