உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்

லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்

ஓமலுார் : தர்மபுரி, தொப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன், 35. முடிதிருத்தும் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, 31. இவர்களது மகன் வெற்றிமாறன், 7. தவிர ஒரு கைக்குழந்தை உள்ளது. அனைவரும் 'சைன்' பைக்கில் நேற்று சேலம் நோக்கி புறப்பட்-டனர்.மதியம், 12:00 மணிக்கு, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஜோடுகுளி முன்பு, புலிசாத்து முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.இதில் டேங்க்கில் அமர்ந்திருந்த சிறுவன் வெற்-றிமாறன் உள்ளிட்ட அனைவரும் காயம் அடைந்து, மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறுவன் உயிரிழந்தான். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி