மனநலம் பாதித்த பெண்ணைசீண்டிய தொழிலாளி கைது
மனநலம் பாதித்த பெண்ணைசீண்டிய தொழிலாளி கைதுஆத்துா:ஆத்துார், கீரிப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 20. கட்டட தொழிலாளியான இவர், கடந்த, 15ல், அதே பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த, 45 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதை, அப்போது வீட்டுக்கு வந்த உறவினர்கள் பார்த்தனர். அவர்களிடம் ராமசாமி, 'வெளியே சொல்லக்கூடாது' என, மிரட்டல் விடுத்தார். இருப்பினும் மல்லியக்கரை போலீசில் அளித்த புகார்படி, இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.