உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

மேட்டூர்: பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா நிதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து சின்-னகாவூரில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதே பகுதியில் மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், 3 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டன.இந்த இரு பணிகளையும், எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து பா.ம.க., செயலர் லுதின்குமார், வீரக்கல்புதுார் முன்னாள் தலைவர் தமிழ்வாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி