உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

சேலம் சேலம், கொங்கணாபுரம் அருகில் உள்ள வெள்ளாளபுரம் சமுதாய கூடத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, நேற்று கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: மக்களுடன் முதல்வர் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில், 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடக்கின்றன. கடந்த, 11, 15ல் நடந்த முகாம்கள் மூலம், மக்களிடம் பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5,146 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.அனைத்து மனுக்கள் மீதும், 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களை சிறப்பாக நடத்த கண்காணிப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் நியமிக்-கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை