ஆத்துார் மாவட்ட சிறை தற்காலிக மூடல்
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல் கிளைச்சிறை தொடங்கப்பட்டது. 2008ல், மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு, 200 பேரை அடைக்-கலாம். நேற்று முன்தினம், அங்கிருந்த, 28 கைதிகள், சேலம் மத்-திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த 37 போலீசாரும், மத்-திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.நேற்று, தளவாட பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை, தனி வாகனத்தில் சேலம் கொண்டு சென்றனர்.இதுகுறித்து சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத் கூறு-கையில், ''சேலம் மத்திய சிறையில், 1,431 கைதிகளை அடைக்-கலாம். தற்போது, 1,226 கைதிகள் உள்ளனர். தர்மபுரி மாவட்ட சிறையில், 187 பேர் உள்ளனர். ஆத்துார் மாவட்ட சிறையில் ஓராண்டாக, 28 கைதிகள் மட்டும் இருந்தனர். 37 போலீசார் பாது-காப்பு பணியில் இருந்தனர். கைதி எண்ணிக்கை குறைவாக இருந்-ததால் தற்காலிகமாக மூட, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தெரிவித்தார். அதேநேரம் இச்சிறையில் வேறு கைதிகளை அடைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசிக்-கின்றனர்,'' என்றார்.சிறப்பு சிறைக்கு திட்டம்?இலங்கை தமிழர், வெளி மாநில, வெளி நாடுகளை சேர்ந்த கைதி-களுக்கு தனியே சிறை இல்லை. இதனால் ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையை புதுப்பித்து வெளி மாநில, வெளிநாடு சிறை கைதிகளை அடைப்பதற்கான சிறையாக மாற்ற, சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தகவல் தெரியாமல்...கடந்த, 15ல், காட்டுப்பன்றி வேட்டையில், 3 பேர் ஈடுபட்டனர். அவர்களை பிடித்த, தம்மம்பட்டி வனத்துறையினர், நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்த, ஆத்துார் மாவட்ட சிறைக்கு அழைத்து வந்-தனர். அப்போதுதான், அச்சிறை மூடப்பட்டது தெரிந்தது. இதனால் அவர்களை, சேலம் அழைத்துச்சென்றனர்.