முகூர்த்தக்கால் நடல் 15ல் கும்பாபிேஷகம்
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்-தது.அதற்கு முன்னதாக கஞ்சமலையில் இருந்து பால மரக்கிளை, மூங்கில் கிளை கொண்டு வரப்பட்டு கோவில் அலுவலகம் அருகே, 2 அடிக்கு குழி தோண்டப்பட்டது. சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.காலாங்கி சித்தருக்கும் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் குழியில், திரளான பக்தர்கள், நவதானியங்-களை போட்டனர். மலர்கள் துாவப்பட்டன. குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தமும் ஊற்றப்பட்டது.சிவாச்சாரியார்கள், பக்தர்கள், காலை, 10:00 மணிக்கு முகூர்த்-தக்கால் நட்டனர். பின், 50 பக்தர்கள், கைகளில் கங்கணம் கட்டி கொண்டனர். வரும், 15 காலை, 6:30 மணிக்கு மேல், 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.