ஏற்காட்டில் கனமழை
ஏற்காடு, ஏற்காட்டில் சில நாட்களாக பகலில் வெப்பம், இரவில் கடுங்குளிர் நிலவியது. நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை, 4:10 மணிக்கு கனமழை பெய்யத்தொடங்கி, 5:15 மணி வரை கொட்டியது. பின் ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி ஓட்டிச்சென்றனர்.