உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் மீது கல்வீச்சு மர்ம நபர்களுக்கு வலை

அரசு பஸ் மீது கல்வீச்சு மர்ம நபர்களுக்கு வலை

மேச்சேரி: சேலம் மாவட்டம் மேச்சேரி பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன், 45. இவர் மதுரையில் இருந்து அரசு பஸ்சை, நேற்று முன்தினம் இரவு மேட்டூருக்கு ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு மேச்சேரி அருகே, 5வது மைல் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத, 3 பேர், பஸ் மீது கல் வீசினர். அதில் பஸ் வலது புறம் இருந்த, அவசர வழி கதவு கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகார்படி மேச்சேரி போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ