மேலும் செய்திகள்
ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி
12-Apr-2025
13 உழவர் சந்தைகளில்ரூ.99 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனைசேலம்:சேலம் மாவட்டத்தில், 13 உழவர் சந்தைகள் உள்ளன. தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று காலை, 5:00 மணி முதல் விற்பனை களை கட்டியது. வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பூஜைக்கு தேவையான பழ வகைகள், மாங்காய், பூக்கள், தேங்காய், எலுமிச்சை, வாழை இலை, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை நுகர்வோர் அதிகளவில் வாங்கி சென்றனர். காய்கறிகள், 223.02 மெ.டன், பழ வகைகள், 44.92 மெ.டன், பூக்கள், 0.96 மெ.டன் உள்பட மொத்தம் 276.71 மெ.டன் அளவுக்கு பொருட்கள் விற்பனை நடந்தது. அதன்மூலம், விவசாயிகள், 99.65 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டினர்.
12-Apr-2025