உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது

விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது

வீரபாண்டி: சேலம் மாவட்டம் சீரகாபாடியை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 65. இவரது வீட்டில், கடந்த, 5ல், 6 பவுன், 2 லட்சம் ரூபாய் திருடு-போனது. மறுநாள் அவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து, திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.நேற்று காலை, தனிப்படை போலீசார் கொம்பாடிப்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாக-னத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில் அவினாசியை சேர்ந்த தர்மகுமார், 45, பாஸ்கர், 23, என்பதும், கந்தசாமி வீட்டில் திருடியவர்கள் என்பதும் தெரிந்தது.இருவர் மீதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்-பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ