உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கறிக்கடை வியாபாரி வீட்டில் 5 பவுன், ரூ.3 லட்சம் மாயம்

கறிக்கடை வியாபாரி வீட்டில் 5 பவுன், ரூ.3 லட்சம் மாயம்

தாரமங்கலம்,: தாரமங்கலம், காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கறிக்கடை வியாபாரி வெங்கடாஜலம், 43. இவர் கடந்த நவ., 8ல், வீட்டு பீரோவில், 50,000 ரூபாயை எடுத்தார். அப்போது பீரோவில், 9 பவுன் நகை, 4.50 லட்சம் ரூபாய் இருந்தது. மறுநாள், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல, வெங்-கடாஜலம் பீரோவை திறந்தார். அப்போது, 4 பவுன், 1.50 லட்சம் ரூபாய் மட்டும் இருந்தது. மீதி, 5 பவுன், 3 லட்சம் ரூபாயை காணவில்லை. இதுகுறித்து வெங்கடாஜலம், நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை