அம்மிக்கல் கொத்துவதுபோல் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த 6 பேர் சிக்கினர்
நங்கவள்ளி: அம்மிக்கல் கொத்துவது போல் நோட்டமிட்டு திருட்டில் ஈடு-பட்டு வந்த, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டியை சேர்ந்-தவர் இளங்கோவன், 59. இவர் குட்டப்பட்டி கூட்டுறவு வேளாண் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக உள்ளார். 2024 ஜூலை, 1 இரவு, குடும்பத்தினருடன் மாடியில் துாங்கியுள்ளார். மறுநாள் காலை கீழ் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்-பட்டு, பீரோவில் இருந்த, 30 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜலகண்டாபுரத்தில் இருந்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அர்ச்-சுனன், 31, குப்பிநாயக்கன்பட்டி ரமேஷ், 49, தங்கராஜ், 34, சபரி, 19, அரியலுார் சக்திவேல், 28. பெரியகுளம் முருகன், 45, ஆகி-யோரை, போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இவர்கள் அனைவரும் அம்மிக்கல் கொத்துவது, பழைய இரும்பு வியாபாரம், காஸ் அடுப்பு சரிசெய்வது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்ட-மிட்டு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது தமி-ழகம் முழுதும், 30 வழக்குகள் உள்ளன. திருட்டில் ஈடுபட்ட பின் பெங்களூரு சென்று தலைமறைவாகி வந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.