உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

சேலம், மே 4சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்மாள், 60. அழகாபுரத்தில் உள்ள மருத்துவர் வீட்டில் பணிபுரிகிறார். இவர் கொண்டப்பநாயக்கன்பட்டியில், வங்கியில் அடகு வைத்த, 6 பவுன் நகையை, கடந்த, 28ல் மீட்டுக்கொண்டு, மருத்துவர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார். மறுநாள், சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே பாரதி நகரில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்ற அவர், பின் டவுன் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். 5 ரோடு சந்திப்பில் வந்தபோது, அவர் பையுடன், 6 பவுன் நகையை காணவில்லை. அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து பஸ்சில் கைவரிசை காட்டியவர் குறித்து விசாரிக்கின்றனர். *****************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை