உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜவேல், 27. இவரது ஒரு வயது ஆண் குழந்தை நிகித், நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்று பிளாஸ்டிக் வாளியில் உள்ள தண்ணீரில் விளையாடிக்கொண்டி-ருந்தது. அப்போது பக்கெட்டில் குழந்தை விழுந்து மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய குழந்தையை, அவரது பெற்றோர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டது. தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ