சிறுத்தை இருப்பது உறுதி
கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி கீழ்பாலத்தாங்க-ரையில், அடுத்தடுத்து, 4 கன்றுக்குட்டி, ஒரு பசு மாட்டை மர்ம விலங்கு கொன்றது. இரு கன்றுக்குட்டியை, வனப்பகுதிக்குள் துாக்கிச்சென்றது. சிறுத்தை நடமாட்டத்தை பார்த்ததாக அப்பகுதி-யினர் தெரிவித்ததால், ஆத்துார் வனக்கோட்ட வனச்சரக குழு-வினர், 7 இடங்களில் நவீன கேமரா பொருத்தி பச்சமலையில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை, 4:00 மணிக்கு பிச்சமுத்து, 55, உள்ளிட்டோர், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றனர். அப்போது வனப்ப-குதி புதரில் இருந்த சிறுத்தை, ஒரு கன்றுக்குட்டி கழுத்தை கடித்-தது. பிச்சமுத்து உள்ளிட்டோர் விரட்டியதால் ஓடியது. காயம-டைந்த கன்றுக்குட்டியை மீட்டனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'கன்றுக்குட்டியை தாக்கியதில் ஏற்பட்ட காயம், கீறல், காலடி தடம் மூலம் சிறுத்தை என உறுதியாகியுள்ளது. கூண்டு ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்-ளது. கால்நடை மருத்துவ குழு வரவழைக்க கடிதம் அனுப்பப்-பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், இரவில் வெளியே வர-வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க நட-வடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.