உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்

திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்

சேலம், :சேலம், கருப்பூர், மேட்டுபதியை சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி தனம், 65. நேற்று, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். அதை, அருகே வசிக்கும் அவரது பேத்தி பார்த்து, வெளிப்புறமாக கதவை தாழிட்டு கூச்சல் போட்டு கத்தினார். அக்கம்பக்கத்தினர் வந்து கதவை திறந்து திருடனை பிடிக்க முயன்றபோது, அந்த நபர், லாவகமாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனம், 'பீரோவில் இருந்த, 5,000 ரூபாய் திருடுபோய்விட்டது' என அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை