உபகரணங்களை அணிந்து குப்பை சேகரிக்க அறிவுரை
சேலம், சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், அஸ்தம்பட்டி, மண்டலம், 16வது வார்டில் துாய்மை பணியாளர்களின் பதிவேடுகளை நேற்று பார்வையிட்டார். அப்போது துாய்மை பணியாளர்களிடம், 'குப்பை சேகரிக்கும் பணியின்போது வீடுதோறும் சென்று மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். முன்னதாக பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்' என அறிவுறுத்தினார்.தொடர்ந்து நாராயண பிள்ளை தெருவில் கழிவு நீர் வாய்கால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.