உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி

மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி

ஓமலுார்: வி.சி., சார்பில், கள்ளக்குறிச்சியில் வரும், 2ல் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி, சேலம் மாவட்டம் ஓமலுாரில் நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் சாமுராய்-குரு தலைமை வகித்தார். அதில் அலங்கார் தியேட்டர் அருகே தொடங்கிய பேரணி, ஓமலுார் பஸ் நிலையம் வரை சென்றது. அங்கு துணை பொதுச்செயலர் வன்னியரசு, மாநாட்டு கொள்கை, மதுவிலக்கு குறித்து பேசினார். பேரணியில் திரளானோர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி