பைக்குடன் சாக்கடையில் விழுந்த பேக்கரி உரிமையாளர் பலி
ஆத்துார், ஆத்துார், கண்ணாடி மில் தெருவை சேர்ந்தவர் கேசவன், 46. ஆத்துாரில், பேக்கரி வைத்துள்ளார். நேற்று மதியம், 3:30 மணிக்கு, 'யுனிகான்' பைக்கில், விநாயகபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநாவுக்கரசு நகர் வழியே சென்றபோது, சாலையோரம் தெருவில் உள்ள சாக்கடைக்குள், பைக்குடன் தவறி விழுந்தார். அதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.