கார் கண்ணாடி உடைப்பு 2 பேருக்கு காப்பு
சேலம் :மேச்சேரி, செம்மனுாரை சேர்ந்தவர் அம்மாசி. ஓட்டல் அதிபர். இவரது மகன் முருகன், 43, இவர், 'ஜாஸ்' காரில், நேற்று முன்தினம், சேலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி புறபப்ட்டார். 5 ரோடு அருகே, பைக்கில் வந்த இருவர், காரை மறித்து, மோதுவது போல் வந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், காரின் முன், பின் புற கண்ணாடிகளை, ஹெல்மெட்டால் உடைத்தனர். இதுகுறித்து முருகன் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, சேலத்தை சேர்ந்த ரவிக்குமார், 26, ஹரி ராகவன், 21, ஆகியோரை கைது செய்தனர்.