இந்து முன்னணியினர்124 பேர் மீது வழக்கு
சேலம்:இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாக, ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில், இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், சேலம் டவுன் வி.ஏ.ஓ., மோகன்ராஜ் புகார்படி, சேலம் டவுன் போலீசார், சேலம் மாவட்ட கோட்ட தலைவர் சந்தோஷ் உள்பட, 124 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.