மேலும் செய்திகள்
முன்விரோதத்தில் வாலிபர் கொலை;6 பேர் அதிரடி கைது
17-Dec-2024
சங்ககிரி: இடைப்பாடி அருகே திருமணமான, 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்-துள்ளனர்.இடைப்பாடி தாலுகாவை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி மணிகண்டன், 26. இவர் அதே பகுதியை சேர்ந்த, 17வயது சிறு-மியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த பிப்., 2ல் மணிகண்டன் சிறுமியை திரு-மணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை கடந்த, 10ல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, மேட்டூர் அரசு மருத்துவ-மனை அதிகாரிகள் அளித்த தகவல்படி, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயினி, சிறுமியை திரு-மணம் செய்து கர்ப்பமாக்கிய மணிகண்டன் மீது 'போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
17-Dec-2024