உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.ஆர்.பி.எப்., ஓய்வு வீரர் விபத்தில் பலி

சி.ஆர்.பி.எப்., ஓய்வு வீரர் விபத்தில் பலி

தாரமங்கலம்: தாரமங்கலம், வெட்னிக் கரட்டை சேர்ந்தவர் குணசேகரன், 67. ஓய்வு பெற்ற, சி.ஆர்.பி.எப்., வீரர். இவர் நேற்று மதியம், 1:30 மணிக்கு ரேஷன் கடைக்கு, யமஹா பைக்கில், தாரமங்கலம் - ஜலகண்டாபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தாரமங்கலத்தில் இருந்து, 'யமஹா ஆர் 15' பைக்கை ஓட்டிவந்தவர், குணசேகரன் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துமவ-னைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. குணசேகரனின் மகன் கார்த்திக் புகார்படி, விபத்து ஏற்படுத்தி-விட்டு தப்பியவரை, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை