உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்

வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்

ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த மே, 26ல், சக்தி அழைத்தலுடன், வைகாசி திருவிழா தொடங்கியது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், விமானம் உள்ளிட்ட அலகு குத்தியும், ராணிப்பேட்டை, புதுப்பேட்டை, பழையபேட்டை, ரயிலடி தெரு வழியே இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். முன்னதாக மூலவர் முத்துமாரியம்மன் சுவாமி, தங்க கவசத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ