உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்

இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரான, அ.தி.மு.க.,வை சேர்ந்த பல் மருத்துவர் சந்திரமோகன், மேட்டூர் போலீசில் நேற்று அளித்த மனு:ஜன., 4, மேட்டூரில் உள்ள என் வீட்டில் இருந்து சதுரங்கா-டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். வழி நெடுக, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., படத்தை அவதுாறாக சித்தரித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதுபோல் சேலம் மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிந்தது தெரிந்தது. இ.பி.எஸ்.,க்கு களங்கம் விளைக்க, சிலர் கூட்டு சதி செய்துள்ள-தாக தெரிகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ