மேலும் செய்திகள்
இதய நோயால் தொழிலாளி பலி
08-Jun-2025
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே பவளத்தானுாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 77. இவர் வீடு அருகே உள்ள ஏரி பகுதியில், நேற்று காலை, 9:00 மணிக்கு இயற்கை உபாதைக்கு சென்றார். பின் வீட்டுக்கு வர, சாலையை கடக்க முயன்றபோது, சங்ககிரி பக்கமிருந்து வந்த கார் மோதியது.இதில் படுகாயம் அடைந்த சுப்ரமணியை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். சுப்ரமணியின் மகன் சரவணன் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Jun-2025