உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி

துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி

கெங்கவல்லி, தலைவாசல், சாத்தப்பாடி, வடக்குகாட்டுக்கொட்டாயை சேர்ந்த நல்லமுத்து மனைவி பட்டத்தாள், 73. நேற்று இரவு, 7:40 மணிக்கு சாத்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க, சாத்தப்பாடி - சார்வாய் சாலை பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட் மோதியது. இதில் பட்டத்தாள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், மொபட் ஓட்டி வந்த, புனல்வாசலை சேர்ந்த முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை