உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு

சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு சமையல் கூட மின் ஒயரை, சமூக விரோதிகள் அடிக்கடி துண்டித்து திருடி செல்கின்றனர். அதிகாலையில் சமையல் கூடம் இருள் சூழ்ந்துள்-ளதால், காலை உணவு திட்ட பணியாளர்கள், மொபைல் போனின், 'டார்ச்' வெளிச்சத்தில் உணவு தயாரிக்கின்றனர். இதுகு-றித்து காலைக்கதிர் நாளிதழின், சாயாக்கடை திண்டு பகுதியில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பனமரத்துப்-பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், சத்துணவு சமையல் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக ஒயரை வெளிப்பகுதியில் கொண்டு செல்வதால் சமூக விரோதிகள் துண்டிக்கின்றனர். அதனால் ஒயரை பிளாஸ்டிக் குழாயில் வைத்து மண்ணுக்கு அடியில் பதித்து, சமையல் கூடத்-துக்கு கொண்டு சென்று இணைப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை