உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோட்டார் மூலம் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.1.27 லட்சம் அபராதம்

மோட்டார் மூலம் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.1.27 லட்சம் அபராதம்

தலைவாசல்: தலைவாசல் அருகே பெரியேரி வழியே செல்லும் வசிஷ்ட நதி பகுதியில், மின்திருட்டு தடுப்பு பறக்கும் படை குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள கமலம் என்பவர், வசிஷ்ட நதியில் மோட்டார் வைத்து முறைகேடாக தண்ணீர் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதனால் வசிஷ்ட நதியில் இருந்த மின் ஒயர் இணைப்பை துண்-டித்தனர். தொடர்ந்து கமலத்துக்கு, 1,27,496 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் மின் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்ததால், கூடுதலாக, 5,000 ரூபாய் சமரச தொகையை, கமலம் செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி